இலங்கை தமிழ்ச் சமூகம் பண்பாட்டினை பேணிக் காக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ்ச் சமூகம் பண்பாட்டினை பேணிக் காக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

பதிவர்: நிர்வாகி, வகை: இலங்கை  
படம்

அக் 11,2015:- தமிழ்ச் சமூகம் பண்பாட்டு மரபுகளைப் பேணி போற்றக்கூடிய சமூகமாக வாழ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘நாம் நம் பண்பாட்டிலிருந்து விட்டுக் கொடுக்கும் விடயங்கள் யாவும் எம் இனத்தின் இருப்பை விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “யாழ். மக்கள் கலாசாரத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்து, பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள். தற்போதைய சமூகமும், எதிர்கால தமிழ்ச் சமூகமும் பண்பாட்டு மரபுகளை பேணி, போற்றக் கூடிய சமூகமாக வாழ வேண்டும். நாம் நம் பண்பாட்டிலிருந்து விட்டுக் கொடுக்கும் விடயங்கள் யாவும் எம் இனத்தின் இருப்பை விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும். எனினும், சாராம்சம் அழியாது அடிப்படை தவறாது நாம் முன்னேற பழகிக் கொள்ள வேண்டும். காலத்திற்கு ஏற்ப பண்பாடு மாற்றமடைவது தவறல்ல. எனினும் அம்மாற்றம் ஆரோக்கியமானதாக அமைய வேண்டும்.” என்றுள்ளார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்